டேய் பக்கோசு! டேய் பக்கோசு ! என்று கத்தினான் முருகன் பண்டாரம்.பகொசு டவுசரை சரி செய்து கொண்டே ஓடி வந்தான். ”ஏன் இப்படி கத்துறீங்க சாமி? நான் இங்க தான் இருந்தேன்.”
”இருந்தீன காது கேட்காதாடா? மூதேவி.இந்த இரண்டு கொடம் தண்ணி கொண்ண்டுவா.”
பாக்கொசு குடத்தை வாங்கிக்கொண்டு இன்றை நோக்கி ஓடினான்.பக்கோசு சிறிது மனவளர்ச்சி குன்றியவன்.அவனுக்கு படிப்பு சுத்தமாக வரவில்லை.அவனுடையா அப்பா அம்மா அவனுடைய சிறிய வயதிலேயே இறந்து விட்டனர்.அவனுடைய ஒரே அக்காவும் கல்யாணம் ஆகி சென்றுவிட்டாள் இவன் அந்த ஊரில் யாருடைய வீட்டிலாவது வேலைசெய்து அந்த வீட்டிலேயே சாப்பிடுவதும் விசேச தினங்களில் கோயில் பூசாரிக்கு உதவிகள் செய்து பூசாரி தரும் உணவினை சாப்பிட்டும் வாழ்ந்தது வந்தான்.
பக்கோசுவுக்கு நிறைய நிலங்கள் இருந்தன. பக்கத்து நகரத்தின் தொழில் வளர்ச்சி காரணமாக அந்த நகரத்தை சுற்றியுள்ள நிலங்களின் மதிப்பு அதிகமாயின. பகொசுவின் நிலத்தின் மதிப்பும் உயர்ந்தது .பாகொசுவின் அக்கா காரி எப்படியாவது தம்பியின் நிலங்களை அபகரித்து விட எண்ணினாள். ஊரிலிருந்த பெரிய மனிதர்கள் பக்கோசுவின் நிலையை எண்ணி அவனுக்கு உதவி செய்ய எண்ணினார்கள். அவர்கள் ஒன்று கூடி பக்கோசுவுக்கு என்ன உதவி செய்யலாம் என்று ஆலோசித்தனர்.அக்கூட்டத்தில் இருந்த ராமசாமி ”பக்கோசுவுக்கு ஒரு கல்யாணம் செய்து வைத்துவிட்டால் அவனுடைய சொத்துகளை அவன் மனைவி பார்த்துகொள்வாள்” என்றார். இருந்தாலும் விவரமில்லாமல் இருக்கும் இவனுக்கு யார் பெண் கொடுப்பார்கள்? என்றார். கூட்டத்தினரும் ஆமோதித்தனர். இருந்தாலும் அவனுக்கு எப்படியாவது கல்யாணம செய்து வைத்துவிட வேண்டும் என்று ஊர் கொத்துக்காரர் கூறினார்.மற்றவர்களும் சரி என தலையசைத்தனர்.
எங்கேயோ தேடி சாப்பாட்டுக்கே கஷ்ட்டப்பட்டு கொண்டிருக்கும் ராமனிடம் பக்கோசுவின் நிலைமையையும் அவனுடைய சொத்து மதிப்பையும் எடுத்துக்கூறி ஊர் கொத்துக்காரர் ராமனின் பெண்ணை பக்கோசுவுக்கு மணம் முடிக்க சம்மதம் வாங்கினார். ”ஐயா நான் என்னோட பொண்னை தர சம்மதிக்கிறேனுங்க ஆனா எம்பொண்ணு சம்மதிகனுமுங்க்களே!எதற்கும் வர்ற புதன் கிளம பொண்ணு பாக்க வாங்க பொண்ணுக்கு புடுச்சா கல்யாணத்த வச்சிரலாம்” என்றான் ராமன்.
கொத்துக்காரர் இதைப்பற்றி ஊர் பொதுமக்களிடம் கூறி எப்படியாவது பொண்ணு சம்மதிக்கணும் அதற்க்கு பக்க்கோசுவை நல்லா மேக்கப் போட்டு பொண்ணு பாக்க கூட்டிக்கிட்டு போகணும் என்றார்.மக்களும் பக்கொசுவை மாற்ற முயற்சிகள் மேற்கொண்டனர்.பகொசுவை டவுனில் கூட்டி சென்று நன்றாக கிராப் வெட்டி புது பேன்ட் சட்டை அணிவித்து பொண்ணு பாக்க கூட்டி சென்றனர்.
பொண்ணு பாக்க செல்லும் பொது பகோசுவிடம் கொத்துக்காரர் அங்கு வந்து நல்லபடியாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் மிக குறைவாகவே பொண்ணு வீட்டில் சாப்பிட வேண்டும் பிறகு பொண்ணு பார்த்து விட்டு வீட்டுக்கு போகும் போது ஓட்டலில் வயிறார சாப்பிடலாம் என்றும் கூறினார் பக்கோசு அதற்கு
சரியென்று தலையசைத்தான். பெண் பார்க்கும் படலம் முடிந்து அனைவரும் சாப்பிட சென்றனர்.பகோசுவுக்கு பெரிய தலை வாழை இலையாய் போட்டனர். பொண்ணை விட்டே பரிமாற்ற வைத்தனர்.பகோசுவுக்கு பெண் கிடைத்த சந்தோசத்திலும் சாப்பாட்டின் ருசியிலும் சாப்பாட்டை ஒரு பிடி பிதத்தான்.பாக்கோசு வாய் நிறைய சோற்றை அள்ளி தின்பதையும் வாயை சுற்றிலும் சோறு ஒட்டியிருப்பதையும் இலையை சுற்றி சோறு இறைந்து கிடப்பதையும் பெண் பார்த்து அருவருப்புர்றால்.
சாப்பிட்டு முடிந்து அனைவரும் திண்ணையில் அமர்ந்து வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டனர்.கொத்துக்காரர் பொண்ணு கொடுக்க சம்மதமா? என்று கேட்டார்.பெண்ணின் அம்மா வேகமாக வெளியே வந்து ”ஏய்யா இப்படி ஒரு லூசு பயலுக்கா எம் பொண்ண கேக்குறீங்க? உங்க பொண்ண கட்டி வைக்கறது தான! எந்துருச்சு போங்க ” என்று கத்தினாள்.
அனைவரும் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு எழுந்து நடந்தனர்.கொத்துக்காரர் பக்கொசுவிடம் ஏண்டா உனக்குத்தான் போகும் போது சோறு வாங்கிப்போடுரன்னு சொன்னனுள்ள அப்புறம் ஏண்டா அப்படி சோத்த தின்ன என்று கேட்டார்.அதற்க்கு பக்க்கொசு ”ஆமா நீங்க போகும் போது சோறு வாங்கிப்போடலைன்னா என்னா பண்றது” என்று கேட்டான். அனைவரும் விக்கித்து நின்றனர்.